Home Blog Page 20

திருநெல்வேலி பல்கலைக்கழக கல்லூரிகளில் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலைக் கல்லூரிகளின் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் (பொ) மருதக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்து, இப்போது அரசு கலைக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள நாகலாபுரம், கடையநல்லூா் மற்றும் கன்னியாகுமரியில் அரசு கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இணைப்பேராசிரியா் அல்லது பேராசிரியராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுந்த தகுதிகளுடன் ஓய்வு பெற்று 1-7-2022-ஆம் நாளன்று 61 வயதுக்கு மிகாதவா்களாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி பதிவிறக்கம் செய்து வரும் 13-6-2022 தேதிக்குள் பதிவாளா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி- 12 என்ற முகவரிக்கு சமா்ப்பிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Application for the Post of Principal for Government Colleges

27/05/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (27/05/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 27/05/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசியில் 23-ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசியில் வருகிற 23ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

தென்காசி நகராட்சி ஆணையாளர் எம்.பாரிஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள நான்கு ரத வீதி மற்றும் அம்மன் சன்னதி பஜார், சுவாமி சன்னதி பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் முன்புறம் சாலையில் கடையை நீட்டிப்பு செய்தும் வியாபார பொருட்களை வைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பகுதிகளில் பலர் தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்வதாலும், தென்காசி சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிகப்படியான மக்கள் இப்பகுதிக்கு பொருட்களை வாங்க வந்து செல்வதாலும் இந்த பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவசர காலங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. தற்போது குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் மேலும் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் நான்கு ரத வீதிகளிலும் ஏற்படும்.

எனவே வருகிற 22-ஆம் தேதிக்குள் நான்கு ரத வீதிகள் மற்றும் அம்மன் சன்னதி பஜார், சுவாமி சன்னதி பஜார் ஆகிய சாலைகளில் முன்புறம் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சியால் வருகிற 23-ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகையையும் ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிக்கலாம்: மாஞ்சோலை தபால் பட்டுவாடா: காட்டு வழியே பயணம்!

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.

தென்னகத்தின் ‘ஸ்பா’ என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குளுமையான சீசன் நிலவும். பெரும்பாலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். அவ்வப்போது இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டும்.
இந்த குளுகுளு சீசனை அனுபவித்து, அருவிகளில் குளித்து மகிழ்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது, ஜூன் மாதத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். சில ஆண்டுகளில் மே மாத இறுதியில் குற்றால சீசன் தொடங்கும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. நேற்று முன்தினம் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்ததால், குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. மெயின் அருவியில் தண்ணீர் பரந்து விழுந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் மட்டும் தண்ணீர் விழவில்லை.

குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. இடையிடையே வெயிலும் அடித்தது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்ததை கேள்விப்பட்ட உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். விடுமுறை நாளான நேற்று ஏராளமானவர்கள் குற்றாலம் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதேநிலை நீடித்தால் குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்கி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15/05/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (15/05/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 15/05/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (15/05/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 15/05/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படைப் பிரிவில் கவுரவப்பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படைப் பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி (Area Commander) மற்றும் துணை வட்டார தளபதி (Deputy Area Commander) பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

▶️ கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும்.

▶️ வயது வரம்பு 21 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

▶️ இது ஒரு கவுரவப்பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது.

▶️ தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் வட்டார தளபதி பதவியில் சேர்ந்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண்/பெண் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

▶️ வட்டார தளபதி பதவி, துணை வட்டார தளபதி பதவி விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை சுயவிபரக் குறிப்புடன் காவல் கண்காணிப்பாளர், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு 20.05.2022-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.கிருஷ்ணராஜ், இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு: Mail Id:sbtenkasidist@gmail.com
Contact: 9385678039

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

 

11/05/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (11/05/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 11/05/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

08/05/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (08/05/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 08/05/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

04/05/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (04/05/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 04/05/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group