மருதாணி என்னும் பாரம்பரிய மாமருந்து!

மருதாணி என்னும் பாரம்பரிய மாமருந்து!

மருதாணி என்னும் பாரம்பரிய மாமருந்து!

மருதாணி என்ற சொல்லை அறியாத பெண்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் பயன்படுத்த கூடிய தாவர வகையாக பெரும் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவனம் ஆகிய பெயர்களும் மருதாணிக்கு உண்டு. அதன் இலை, பூ, விதை, ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டது. பாரம்பரிய பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட குடும்பத்தின் விசேஷ நாட்களில் பெண்கள் ஒன்று கூடி தங்கள் கைகளுக்கு மருதாணி இட்டு அழகுபடுத்திக் கொள்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஈரான், அரேபியா ஆகிய நாடுகளிலும் காலங்காலமாக மருதாணி இட்டுக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. பல்வேறு உலக நாடுகளிலும் மருதாணி மீதான ஆர்வம் பெருகி வருகிறது. அழகு என்ற ஒரு காரணத்துக்காக மட்டும்தான் மருதாணி பயன்படுகிறதா என்றால், இல்லை. உடல்நலனுக்காகவும் பாரம்பரிய மருத்துவரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மருதாணி இலையை அரைத்து இரவில் கைகளில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன என்று தெரியுமா..?

உடலின் வெப்பநிலையை சமப்படுத்துவதுடன், மாதவிடாய் காலத்தில் ஏற்படும். அதிகப்படியான ரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது. வெள்ளைப்படுதல் பிரச்சினை குறையும். அடிக்கடி மருதாணி இட்டு வருபவர்களுக்கு மனநலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுவதில்லை.

மருதாணி இலை சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு, கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண், கட்டி, பித்த வெடிப்பு ஆகியவற்றை குணப் படுத்துகிறது. நகச்சுத்தி ஏற்படாமல் தடுப்பதுடன், நகங்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும்
உதவுகிறது.

கால் பாதங்களில் எரிச்சல் மற்றும் அம்மைப் புண் ஆகியவற்றுக்கு மருதாணி இலையை அரைத்து தடவிக்கொள்ளலாம். கால் ஆணி பிரச்சினை இருப். பவர்கள், மருதாணியுடன் வசம்பு, மஞ்சள், கற்பூரம். ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதன் மீது தொடர்ச்சியாக சில நாட்கள் தடவி வந்தால் குணமாகும்.

ஆறாத வாய்ப்புண் இருப்பின் மருதாணி இலையை அரைத்து நீரில் கரைத்து, வடித்து வாய் கொப்பளிக்கலாம். மருதாணி இலையில் கசாயம் தயாரித்து சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது போல தடவி விடலாம்.

ஒரு சிலருக்கு மருதாணி இட்டுக்கொள்வதால் சளித்தொல்லை ஏற்படும். அதை தவிர்க்க, மருதாணி இலையுடன் 7 அல்லது 8 நொச்சி இலைகளை அரைத்து இட்டுக்கொள்ளலாம்.

மருதாணி விதை எண்ணெய்யை தடவி வந்தால், உடல் எரிச்சல் குணமாகும். மருதாணிப் பூவை நன்றாக உலர்த்தி அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும். சரியாக தூக்கம் இல்லாதவர்கள் தலையணைக்கு கீழ் மருதாணி பூக்களை வைத்துக் கொண்டால் நன்றாக தூக்கம் வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here