Home Blog Page 27

15/11/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (15/11/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 15/11/2021

14/11/2021: இன்றைய தமிழ்நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு செய்திகள்..

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (14/11/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 14/11/2021

14/11/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (14/11/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 14/11/2021

ஜிம் செல்வதால் தான் இதய செயலிழப்பு ஏற்படுகிறதா?

0
சமீப காலங்களில் ஜிம்களில் பயிற்சி செய்யும் போது சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதை வைத்து ஜிம்களில் பயிற்சி செய்வது ஆபத்தானதா? ஜிம்களில் பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ஆபத்தானதா? என்பது போன்ற ஐயங்கள் எழுகின்றன.
 
ஜிம் எனும் உடற்பயிற்சிக் கூடத்தில் சிறப்பான முறையில் அங்கம் அங்கமாக தசைகளுக்கு வலுசேர்க்குமாறு தேகப்பயிற்சி வழங்கப்படுகின்றது. அங்கு இதற்கென பிரத்யேக பயிற்சியாளர் இருப்பார். அவர் பயிற்சி எடுக்க வந்தவருக்குரிய பயிற்சிகளை முறையாகக் கற்றுக் கொடுப்பார். இதுவே ஜிம்கள் இயங்கும் முறை.
 
இதில் மிகக் குறைவான சதவிகிதம் பேர் தங்களுக்கு ஆறடுக்கு வயிற்றுப் பகுதி வேண்டும் என்றும் ஆணழகன் போட்டியில் பங்குபெற வேண்டும் என்றும் வருவார்கள். பெரும்பான்மை நபர்கள் எடை குறைப்புக்கும்
கூடவே தசைகளை வலுப்படுத்தவும் எடை தூக்கும் பயிற்சி, நடைப்பயிற்சி போன்வற்றில் பங்கு பெறுவார்கள். செய்திகளில் பெரிதாகப் பேசப்படுவதாலேயே மனணங்களுள் சில ஜிம்களில் நடந்ததால் ஜிம் சென்றாலே இதயம் பாதிக்கும் என்ற எண்ணத்திற்கு வருவது தவறாகும். உடற்பயிற்சி , விளையாட்டு போன்றவற்றிக்கு முக்கியத்துவமே அளிக்காத நம் நாட்டில் இது போன்ற அவநம்பிக்கைகள் இன்னும் ஆபத்திலே தான் போய் முடியும்.
 
பெருநகரங்களிலும் சரி, சிற்றூர்களிலும் சரி இப்போது தான் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்பட்டு உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று தங்களால் ஆகுமானவரை தேகப்பயிற்சி செய்யத் துவங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பெரும்பான்மை பெண்களுக்கு பொதுவெளியில் நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செல்ல இயலாமல் இருக்கும் நிலையில் பெண்களுக்கும் இந்ந உடல் பயிற்சி கூடங்கள் மிகத் தேவையான ஒன்றாக இருக்கின்றன.
 
தாங்கள் உடற்பயிற்சிக் கூடங்களை உபயோகித்து தேகப்பயிற்சி செய்பவராயின் அதை அச்சமின்றி தொடருங்கள். பின்வரும் யோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும்.
 
1. தங்களின் வயதென்ன? தங்களின் உடல் எடை என்ன? தங்களுக்கு இருக்கும் இணை நோய்கள் ( நீரிழிவு , ரத்த கொதிப்பு, இதய நோய் , சிறுநீரக நோய்) என்ன? போன்றவற்றை உங்களது மருத்துவரிடம் கூறி அவரிடம் தாங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து கருத்துக் கேளுங்கள்.
 
2. தங்களுக்கு உதவி புரியும் தேகப்பயிற்சியாளரிடமும் தங்களுக்கு இருக்கும் இணை நோய்கள் குறித்து கூறுங்கள்.
 
3. இதய நோய் இருப்பவர்கள் இதயத் துடிப்பை ஓரளவுக்கு மேல் ஏற்றும் உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். எனவே மிதமான உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள்.
 
4. அதீத உடல் சோர்வுடனும் மனச்சோர்வுடனும் ஜிம்மிற்குச் செல்லாதீர்கள். புத்துணர்வான எண்ணத்துடனும் தேகத்துடனும் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் நோய்வாய்பட்டிருக்கும் போது உடற்பயிற்சி செய்யக்கூடாது.
 
5. உண்ணாநோன்பில் இருக்கும் போது குறிப்பாக தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு பிடிக்கும் போது அதீத உடற்பயிற்சி தேவையற்றது. நோன்பை முறித்து விட்டு பிறகு உடற்பயிற்சி செய்யுங்கள்
 
6. நன்றாக வயிறு முட்ட உணவு சாப்பிட்டு விட்டு எப்போதும் உடற்பயிற்சி செய்யக்கூடாது. நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் அதிக நேரம் வலுவான உடற்பயிற்சி செய்யக்கூடாது. ஹைப்போ க்ளைசீமியா எனும் ரத்த க்ளூகோஸ் அளவுகள் குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு.
 
6. உடல் தரும் அபாய சமிக்ஞைகளான தலைசுற்றல் , குமட்டல், வியர்த்துப்போதல் , படபடவென்று வருவது இவற்றை உதாசீனப்படுத்தாமல் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க வேண்டும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் இதய நோய் சிறப்பு நிபுணரிடம் ஒபினியன் வாங்க வேண்டும். எக்கோ ஸ்கேன் , ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டும்.
 
7. தாங்கள் இணை நோய்களான நீரிழிவு , இதய நோய் , ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு செய்து வரும் மருத்துவத்தை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
 
8. உடற் பயிற்சியை சிறிதிலிருந்து பெரிதாக எளிதானதில் இருந்து கடினமானதாக குறைவான நேரத்தில் இருந்து நீண்ட நேரம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு நேரம் கொடுத்துக்கூட்ட வேண்டும். அதீத சுமையை திடீரென்று உடல் மீது ஏற்றக்கூடாது.
 
9. குறைவான காலத்தில் மிக அதிகமாக உடலை ஏற்றுவதோ அதே குறைவான காலத்தில் மிக அதிமாக உடலைக் குறைக்க முயல்வதோ ஆபத்தில் முடியலாம். குறுக்கு வழியில் உடலை ஏற்றுவதற்கும் வலிமையைக் கூட்டுவதற்கும் உபயோகப்படுத்தப்படும் மருந்துகள் ஆபத்தானவை என்பதை அறிக. இயன்ற அளவு இயற்கையான உணவு முறையில் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கச் செய்வது சிறந்தது. மீறி புரதச்சத்து பொடிகள் தேவை என்றால் அதை மருத்துவ கண்காணிப்பில் எடுப்பது சிறந்தது.
 
10. 30+ வயதாகியிருக்கும் மக்கள் கட்டாயம் வருடம் ஒருமுறை இணை நோய்களை கண்டறியும் பரிசோதனைகளை செய்து கொள்வது சிறந்தது. காரணம் பல பேர் தங்களுக்கு ரத்தக்  கொதிப்பு இருப்பதையோ
நீரிழிவு இருப்பதையோ அறியாமலே இருக்கிறார்கள். கூடவே மறைந்து இதய நோயும் இருக்கலாம். எனவே தயவு கூர்ந்து வருடாந்திர பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இன்னும் உங்களின் குடும்பத்தில் தாய் தந்தை ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு இதய நோய் இருந்தாலோ அவர்களுக்கு இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்திருந்தாலோ தாங்கள் இன்னும் கவனத்துடன் இதயத்தைப் பேண வேண்டும்.
 
ஜிம்களால் இதய நோய் வரும் வாய்ப்பு மட்டுப்படுமே அன்றி கூடுவதில்லை
ஆயினும் ஒருவருக்கு ஏற்கனவே இதய நோய் இருப்பின் அவர் அதை அறியாமல் அல்லது அறிந்தே அதைப் புறக்கணித்து தொடர்ந்து
இதயத்தின் வேலையைக் கூட்டும் உடற்பயிற்சிகளைச் செய்தால் இதயம் பாதிப்படையவே செய்யும். உங்கள் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சியை உரிய கவனத்துடன் தொடர்ந்து செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஜிம்களில் உடற்பயிற்சி செய்யும் போது இறந்த சொற்ப உயிர்களைப் பற்றியே அதிகம் பேச்சு வரும். ஆனால் இன்னும் அதிகமான உயிர்கள் வீட்டில் உறங்கும் வேளையில் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றைப்பற்றி யாரும் பேச மாட்டோம். அச்சமின்றி தேகத்தை வலுப்படுத்துங்கள். உடலினை உறுதி செய்தால் வாழ்வு வளம் பெறும்.
 
கட்டுரை: டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொதுநல மருத்துவர்
 

30/10/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (30/10/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 30/10/2021

மருதாணி என்னும் பாரம்பரிய மாமருந்து!

மருதாணி என்னும் பாரம்பரிய மாமருந்து!

மருதாணி என்ற சொல்லை அறியாத பெண்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் பயன்படுத்த கூடிய தாவர வகையாக பெரும் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவனம் ஆகிய பெயர்களும் மருதாணிக்கு உண்டு. அதன் இலை, பூ, விதை, ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டது. பாரம்பரிய பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட குடும்பத்தின் விசேஷ நாட்களில் பெண்கள் ஒன்று கூடி தங்கள் கைகளுக்கு மருதாணி இட்டு அழகுபடுத்திக் கொள்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஈரான், அரேபியா ஆகிய நாடுகளிலும் காலங்காலமாக மருதாணி இட்டுக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. பல்வேறு உலக நாடுகளிலும் மருதாணி மீதான ஆர்வம் பெருகி வருகிறது. அழகு என்ற ஒரு காரணத்துக்காக மட்டும்தான் மருதாணி பயன்படுகிறதா என்றால், இல்லை. உடல்நலனுக்காகவும் பாரம்பரிய மருத்துவரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மருதாணி இலையை அரைத்து இரவில் கைகளில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன என்று தெரியுமா..?

உடலின் வெப்பநிலையை சமப்படுத்துவதுடன், மாதவிடாய் காலத்தில் ஏற்படும். அதிகப்படியான ரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது. வெள்ளைப்படுதல் பிரச்சினை குறையும். அடிக்கடி மருதாணி இட்டு வருபவர்களுக்கு மனநலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுவதில்லை.

மருதாணி இலை சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு, கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண், கட்டி, பித்த வெடிப்பு ஆகியவற்றை குணப் படுத்துகிறது. நகச்சுத்தி ஏற்படாமல் தடுப்பதுடன், நகங்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும்
உதவுகிறது.

கால் பாதங்களில் எரிச்சல் மற்றும் அம்மைப் புண் ஆகியவற்றுக்கு மருதாணி இலையை அரைத்து தடவிக்கொள்ளலாம். கால் ஆணி பிரச்சினை இருப். பவர்கள், மருதாணியுடன் வசம்பு, மஞ்சள், கற்பூரம். ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதன் மீது தொடர்ச்சியாக சில நாட்கள் தடவி வந்தால் குணமாகும்.

ஆறாத வாய்ப்புண் இருப்பின் மருதாணி இலையை அரைத்து நீரில் கரைத்து, வடித்து வாய் கொப்பளிக்கலாம். மருதாணி இலையில் கசாயம் தயாரித்து சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது போல தடவி விடலாம்.

ஒரு சிலருக்கு மருதாணி இட்டுக்கொள்வதால் சளித்தொல்லை ஏற்படும். அதை தவிர்க்க, மருதாணி இலையுடன் 7 அல்லது 8 நொச்சி இலைகளை அரைத்து இட்டுக்கொள்ளலாம்.

மருதாணி விதை எண்ணெய்யை தடவி வந்தால், உடல் எரிச்சல் குணமாகும். மருதாணிப் பூவை நன்றாக உலர்த்தி அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும். சரியாக தூக்கம் இல்லாதவர்கள் தலையணைக்கு கீழ் மருதாணி பூக்களை வைத்துக் கொண்டால் நன்றாக தூக்கம் வரும்.

திறமையை தொழிலாக மாற்றலாம்

திறமையை தொழிலாக மாற்றலாம்

நீங்கள் வீட்டை அலங்காரப்படுத்துவதில் ஆர்வ ‘முடையவரா? ஆம் எனில், அதையே தொழிலாகவும் மாற்றி, சுயமாக சம்பாதிக்கலாம். அதைப்பற்றிய விவரங்களைக் காண்போம்.

உட்புற அலங்கார வடிவமைப்பு

பல பெண்கன் எந்தப் பொருளை, எங்கு வைத்தால், வீடு அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில், நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இதற் கான தனிப் படிப்பு இருந்தாலும், இயற்கையிலேயே பெண்களுக்கு இதில் அனுபவம் இருக்கும். சுயமாக சம்பாதிக்க விரும்பும் பெண்கள், முதலில் இதனைத் தனக்கு தெரிந்த வீடுகளிலோ, நண்பர்களின் வீடுகளில் திருந்தோ தொடங்கலாம். இதில் வாடிக்கையாளரின் திருப்தி தான் உங்களுக்கு நல்ல விளம்பரத்தைப் பெற்றுத் தரும்.

எப்படி அழகுபடுத்துவது?

முதலில் நீங்கள் அழகுபடுத்த இருக்கும் இடத்தைப் பற்றி, வாடிக்கையாளரிடம் தெளிவாகக் கேட்டு தெரிந்துரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வீடாக இருந்தால், வாடிக்கையாளரின் ரசனைக்கேற்ப சுவர்களின் நிறத்தையும், அலங்காரப் பொருள்களையும், நாற்காலியையும் மேசையையும், ஓவியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதில் திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது. வீட்டின் அளவுக்கேற்ப, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருள் இருக்க வேண்டும். கைவினைப் பொருட்களையும், சிறந்த ஓவியங்களையும் விரும்பாத வாடிக்கையாளர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப பொருட்களைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ற இடத்தில் அவற்றைப் பொருத்துவது சிறப்பானது, அது மட்டுமின்றி காலத்திற்குத் தகுந்தாற் போலவும், மாறிவரும் ரசனைக்கேற்பவும், அலங்காரப்  பொருட்களையும், அவற்றின் தரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு பொருளும், வாடிக்கையாளருக்கு நீண்ட நாள் பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளரின் திருப்தி

சிறந்த வேலைப்பாடு, தகுந்த வருமானத்தைப் பெற்றுத் தரும், வாடிக்கையாளர் உங்களின் வேலையை பார்த்து மகிழ்ந்து, அதற்கு நீங்கள் நிர்ணயித்த கட்டணத்தை தருவதோடு மட்டுமல்லாமல், அதைத் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறுவார். அதன் மூலம் உங்களுக்கு லாபமும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

எப்படி விளம்பரப்
படுத்துவது?

அதிக லாபத்தை ஈட்ட, அதிகமாக விளம்பரப்படுத்துவது முக்கியமானதாகும். உங்கள் வாடிக்கையாளரின் மூலம் விளம்பரம் கிடைத்தாலும், அது குறுகிய வட்டத்துடன் முடிந்து விடக்கூடும். எனவே அதிக லாபத்தை ஈட்ட, உங்கள் வேலைப்பாட்டை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்துவது முக்கியமானதாகும். முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில்,
விளம்பரப்
படுத்துவதன் மூலம், அதிக வாடிக்கையாளரைப் பெறலாம்.

முயன்றால் வெல்லலாம்

எந்த ஒரு செயலை செய்யும்போதும், தன்னம்பிக்கை யோடு கூடிய விடா முயற்சியே வெற்றியைத் தேடி தரும். முதலில் நீங்கள் தனி ஆளாக இதனை ஆரம்பித்தாலும், • உங்களின் தொடர் முயற்சியால், தொழிலை மேம்படுத்தி, சிறந்த தொழில் அதிபராக உருவாகலாம்.

தொட்டில் யோகா

தொட்டில் யோகா

குழந்தைகளாக இருந்தபோது அம்மாவின் புடவை யில் தொட்டில் கட்டி விளையாடி இருப்போம். காற்றில் அசையும் தொட்டிலோடு, நாமும் அசைந்து ஆடி மகிழ்ந்திருப்போம். தற்போது அதே தொட்டிலைக் கொண்டு ‘யோகா’ பயிற்சி செய்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் ‘ஆன்ட்டி கிராவிட்டி’ எனும் இந்தப் பயிற்சியை, அழகு தமிழில் ‘தொட்டில் யோகா’ என்கிறோம். பிபாஷா பாசு, ஆலியா பட், ரகுல் பிரீத் சிங், சமந்தா போன்ற திரை உலக பிரபலங்களின் தற்போதைய பிட்னஸ் முயற்சியாக இருப்பது ‘தொட்டில் யோகா’.

தலை முதல் கால் வரை பல நன்மைகளைக் கொடுக்கக் கூடிய இந்தப் பயிற்சியை எளிதாகவும், சுலபமாகவும் செய்யலாம். ‘தொட்டில் யோகா’ பற்றி பெங்களூருவைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஷாலினி கூறுகிறார்.

“யோகாவில் காலில் அழுத்தம் கொடுத்து செய்யும் பயிற்சிகள் சிரமமானது. அதனாலேயே யோகா கற்கும்பலரும் அந்த பயிற்சிகளைத் தொடருவது இல்லை.
அவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்திருப்பது ‘தொட்டில் யோகா’. தரையின் மீது செய்யும் அனைத்து யோகா பயிற்சிகளையும், ‘தொட்டில் யோகா’ முறையில் செய்யலாம். சிரமமின்றி எளிதாக ரசித்தபடியே இந்த யோகாவைச் செய்வதால், உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

“தொட்டில் யோகா’ பயிற்சிகளை மேற்கொள்வதால் ரத்த ஓட்டம் சீராகும், முதுகுவலி பிரச்சினை
உள்ளவர்களும் இந்த யோகாவைச் செய்யலாம். இதனால் வலி குறையும், முதுகுப் பகுதியில் உள்ள முக்கியமான தசைகள் வலுவடைவதால் முதுகெலும்பு, தோள் பட்டை போன்றவற்றின் நெகிழ்வுதன்மையை மேம்படுத்த முடியும்.

‘தொட்டில் யோகா’வில், பலவித அசைவுகள் இருப்பதால், ஜீரண உறுப்புகள் சீராகச் செயல்படும். இதன் மூலம், ஜீரன கோளாறுகள் குணமாகும். மலச்சிக்கல் பிரச் சினைக்குத் தீர்வு கிடைக்கும். இன்றைய காலக்கட்டத்தில், பலரும் ஒரே இடத்தில் உடல் அசையாமல் அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கான சிறந்த பயிற்சியாக ‘தொட்டில் யோகா’ அமைகிறது.

இதில், பல அசைவுகள், நகர்வுகள் மேற்கொள்ளப்ப படுகின்றன. இதனால், உடலின் வளைவுத்தன்மை அதிகரிக்கும். 16 வயது முதல் 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சிகளை மேற் கொள்ளலாம்” என்கிறார் டாக்டர் ஷாலினி.

‘தொட்டில் யோகா’ பயிற்சி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைப் பற்றி கூறும்போது, “எந்த யோகா செய்வதாக இருந்தாலும், உடல் இலகுவாக் இருக்க வேண்டும். தொட்டில் யோகாவிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது. பயிற்சி செய்வதற்கு முன்பு திட உணவை சாப்பிடக் கூடாது. முடிந்தவரை பழச்சாறு, தண்ணீர் அருந்துவது சிறந்தது. அவசர கதியில் பயிற்சி செய்யாமல், நிதானமாகச் செய்தால் மனம் இலகுவாகும்.

தளர்வான ஆடைகள் அணியாமல், உடலுக்கு ஏற்ற சற்றே இறுக்கமான ஆடைகளை அணியலாம். தொட்டில் யோகாவை செய்வதற்கு முன் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. இதன் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால், வீட்டிலேயே பயிற்சி செய்யலாம்” என்கிறார் டாக்டர் ஷாலினி.

ஹெபடைடிஸ் எனும் ஆபத்து…

ஹெபடைடிஸ் எனும் ஆபத்து…

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28-ம் தேதி ஹெபடைடிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் ஹெபடைடிஸ் நோயினால் 30 வினாடிக்கு ஒருவர் இறப்பதாகவும், 2030-ம் ஆண்டில் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறும் எனவும் கூறுகிறது. ஹெபடைடிஸ் நோயை பற்றி விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இந்த தினத்தில் பதாகைகள், விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுகின்றனர்.

ஹெபடைடிஸ் நோய் வைரஸ் தொற்றால் ஏற்படக் கூடியது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கல்லீரலில் வீக்கம் உண்டாகும். உடல் சோர்வு, வெளிறிய நிறத்தில் மலம் வெளியேறுதல், பசியின்மை, எதிர்பாராத விதமாக எடை குறைதல், கண்கள், நகங்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். இந்த நோய், ஹெபடைடிஸ் A, B, C, D, E என பலவகைப்படுகிறது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு வீதத்தில் தொற்று ஏற்படுத்துகிறது.

ஹெபடைடிஸ் A – நோய் தொற்றால் பாதிக்கப் பட்டவரின் மலம், மாசுபடுத்தப்பட்ட உணவு, தண்ணீர் மூலம் பரவுகிறது.

ஹெபடைடிஸ் B – பாதிக்கப்பட்டவரின் உடல் சுரப்பிகளில் இருந்து பரவுகிறது. ரத்தம், விந்து போன்ற வற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.

ஹெபடைடிஸ் C – பாதிக்கப்பட்டவருக்கு பயன்படுத்திய ஊசிகள், சவரக்கத்திகள் போன்றவற்றின்
மூலம் பரவுகிறது.

ஹெபடைடிஸ் D – இது டெல்டா ஹெபடைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் அரிதானது. ஹெபடைடிஸ் B ஏற்பட்டவர்களுக்கு இந்த வகை தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஷெஹபடைடிஸ் E – மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் மூலம் பரவுகிறது.

தொற்றை கண்டறியும் முறை

ரத்த பரிசோதனை, கல்லீரல் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்தும் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறியலாம்.

சிகிச்சை முறைகள்

மருத்துவரை அணுகி, எந்த வகையான தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என தெரிந்து கொண்டு, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.

போதுமான ஓய்வு,ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியமானவை.

தொற்று ஏற்பட்டதற்கான லேசான அறிகுறிகள் தெரியும் போதே, மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று பரலாமல் இருக்க, குழந்தை பிறந்து 12-18 மாதங்களில் தடுப்பூசி போட வேண்டும்.

நூடுல்ஸ் வரலாறு..

நூடுல்ஸ் வரலாறு..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த உணவாக மாறியிருக்கிறது நூடுல்ஸ். சமைப்பதற்கு எளிதாக இருப்பதோடு, குறைவான நேரத்தில் சட்டென்று தயாரிக்க முடியும் என்பதால், பலரது விருப்ப உணவு பட்டியலில் நூடுல்ஸ் இடம் பிடித்திருக்கிறது. இரண்டே நிமிடத்தில் ரெடியாகும் நூடுல்ஸின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

நூடுல்ஸ் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

சீனாதான் நூடுல்ஸின் தாயகம் என்பது அளைவரும் அறிந்ததே. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே சீனாவில் நூடுல்ஸ் புழக்கத்தில் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் சிங்ஹாய் மாகாணத்தில் இதற்கான சான்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நூடுல்ஸும், சீனர்களின் நம்பிக்கையும்

சீனாவில் நூடுல்ஸ் பாரம்பரிய உணவாகவே பார்க்கப்படுகிறது. சீனர்கள், நீளமான நூடுல்ஸ் உண்பது நீண்ட ஆயுளை குறிக்கும் என நம்புகிறார்கள். வழக்கமான அளவு நூடுல்ஸை விட கூடுதல் நீளமாக இருக்கும் நூடுல்ஸ், சீனாவில் புத்தாண்டு தினத்தன்று அதிகம் பரிமாறப்படும். மேலும் நீளமான நூடுல்ஸை வெட்டு வதை சீனர்கள் அதிர்ஷ்டமில்லாத ஒன்றாகவே கருதுகிறார்கள்.

நூடுல்ஸ் ஆரோக்கியமானதா?

நூடுல்ஸை அதிகம் பேர் விரும்பிளாலும், சமைப்பதற்கு எளிதாக இருந்தாலும் ‘உடலுக்கு ஆரோக்கிய மானது இல்லை’ என்பது அதன் மீது பரவலாக வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. பழங்காலத்தில் நூடுல்ஸை தானியங்களைக் கொண்டு தயாரித்தனர். தற்போது கோதுமை மாவு மற்றும் இதர பொருட்களைக் கொண்டு தயாரிக்கின்றனர்.

சுவையை அதிகரிப்பதற்காக அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், நிறமூட்டிகள் நூடுல்ஸை ஆரோக்கியமற்றதாக மாற்றுகின்றன. நூடுல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அதன் தரத்தில் கவனம் செலுத்துவது
முக்கியமானது என்கிறார்கள் உணவு நல ஆர்வலர்கள்.

மற்ற நாடுகளிலும் பிரபலமடைந்த நூடுல்ஸ்

இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் ஜப்பானில்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஜப்பானில் பல வகையான நூடுல்ஸ் உணவுகளை காட்சிப்படுத்துவதற்கும், உண்பதற்கும் தனி அருங்காட்சியகமே உள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் சுமார் 4500-க்கும் மேற்பட்ட வகை வகையான நூடுல்ஸ்கள் விற்கப் படுவது சுவையான விஷயம்.

சீனா, ஜப்பானை போலவே தாய்லாந்து, கொரியா நாடுகளிலும் நூடுல்ஸ் பிரதான உணவாக இருக்கிறது. அவரவர் ரசனைக்கும், சுவைக்கும் ஏற்ற வகையில் முட்டை, இறைச்சி என பல விதமான பொருட்கள் சேர்த்து நூடுல்ஸ் உணவை தயாரிக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6-ந் தேதியை நூடுல்ஸ் தினமாக பல நாடுகளில் கொண்டாடுகிறார்கள்.