தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ (One Stop Center) துவங்கப்பட்டுள்ளது. அதில் சுழற்சி முறையில் பணிபுரிய வழக்கு பணியாளர் – 1, வழக்கு பணியாளர் – 2, பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதியத் தொகையாக மாதத்திற்கு ரூ.6,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, பணி முன் அனுபவம் மற்றும் ஊதிய விவரங்கள் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Social Welfare Department 1

Notification – Social Welfare Department 2

கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 04/04/2022 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Social Welfare Department

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம்,
86A, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
தென்காசி – 627 811.

மேலும் பல தென்காசி/நெல்லை வேலைவாய்ப்புச் செய்திகளை காண இங்கே அழுத்தவும்..

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here