குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் கிராமப்புற பள்ளிக் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு தொற்றுநோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கற்குடி, கட்டளைக்குடியிருப்பு கிராமப்பள்ளிகளில் நடைபெற்றது.
விலங்கியல்துறை தலைவர் மாருதிகலைச்செல்வி, பேராசிரியைகள் வசந்தி, சாந்திபிரியா, பாரதி, இசக்கியம்மாள், கவிதா, கலைவாணி,ராமலட்சுமி ஆகியோர் பங்கேற்று பேசினர். விலங்கியல்துறை விரிவாக்க குழு உறுப்பினர் சாந்திபிரியா நன்றி கூறினார். சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை இசக்கியம்மாள், ஆய்வக உதவியாளர் கண்ணன் செய்திருந்தனர்.