பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் குளித்தவர் பலி

பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் குளித்தவர் பலி

பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் குளித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுமந்த நாயுடு. இவரது மகன் பிரவீன்குமார் (வயது 42). இவர் தனது நண்பர்களுடன் தமிழகத்திற்கு சுற்றுலா வர முடிவு செய்தார். அதன்படி பிரவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

தமிழகத்தில் பல இடங்களுக்கு சென்று விட்டு நேற்று காலை நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு காரில் வந்தனர். பாபநாசத்தில் அணை, அருவி, தடாகம் போன்றவை உள்ளது. இங்கு வந்த பிரவீன்குமாரின் நண்பர்கள் அகஸ்தியர் அருவியில் குளித்தனர். ஆனால் பிரவீன்குமார் மட்டும் அருவியில் குளிக்காமல் அருகில் உள்ள தடாகத்தில் இறங்கி குளித்துள்ளார்.

அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் அருகில் சென்று அவரை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.

இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பலியான பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here