கடையநல்லூர் வனப்பகுதியில் காட்டுத்தீ – விடிய, விடிய போராடிய வனத்துறையினர்

கடையநல்லூர் அருகே மேக்கரை வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான பட்டா இடங்களில் கோடை வெயிலால் இலைகள், சருகுகள் காய்ந்து கிடக்கின்றன. இந்தநிலையில் கடையநல்லூர் வனச்சரகம் மேக்கரை பீட்டுக்கு உள்ளிட்ட வெள்ளக்கல்தேரி பகுதியில் காய்ந்த சருகுகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது.

இதனால் வடகரை, அச்சன்புதூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு புகை மூட்டமாக தென்படுகிறது. தீயில் கருகிய இலைகள் சாம்பலாக காற்றில் பறந்து வருகிறது.

தகவல் அறிந்ததும் வன ரேஞ்சர் சுரேஷ் உத்தரவின் பேரில் கடையநல்லூர் வனபிரிவு வனவர்கள் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 25-க்கும் மேற்பட்ட வனக்குழுவினர்கள் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இரவுபகலாக தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். காட்டுத்தீயில் அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகும் அபாயம் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

-தினத்தந்தி

Also Read: விக்கிரமசிங்கபுரத்தில் மீன்பிடிக்க விரித்த வலையில் சிக்கிய 3 மலைப்பாம்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here