திருநெல்வேலி மாவட்டம் பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பொது சுகாதார ஆய்வகம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியிடமாக உள்ள நுண்ணுயிரியலாளர் (Microbiologist), லேப் டெக்னிஷியன், ஆய்வக உதவியாளர் (Lab Attendant), குளிர்பதன கம்மியர் (Refrigeration Mechanic), மருந்தாளுநர் (Pharmacist), பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant), துணை செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், வாகன ஓட்டுனர், வாகன கிளீனர், மனநல ஆலோசகர் (Psychologist) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/04/2022
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், கல்வித் தகுதி, ஊதியம், பணிபுரிய வேண்டிய இடம் ஆகியவற்றின் விபரங்களை பதவிகள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
Also Read: விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..