கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் (வேன் கிளீனர்) பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: வாகன சீராளர் (Van Cleaner)

ஊதிய விகிதம்: ரூ.15,700 – ரூ.50,000

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01

பணியமர்த்தப்படும் இடம்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்

தகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்; நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 34 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 24-03-2022 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Applications – Vacant Post of Van Cleaner

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

கன்னியாகுமரி மாவட்டம்,

நாகர்கோவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here